08 October 2013

முதல் பதிவு

வணக்கம்.,

நான் ஏற்கெனவே அரை குறையான முயற்சியில் இரு பிளாக்குகளை துவங்கி பின்பு தொடர்ச்சி கொடுக்க முடியாமல் விட்டு விட்டேன் நான் பதிவுலகில் அவ்வளவு அறிமுகமானவன் அல்லன்.ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பேஸ்புக்கிலும் கொஞ்சமே கொஞ்சம் பிளாக்குகளிலுமே அறிமுகம் உள்ளவன்.இந்த பிளாக்காவது நிலைக்கும் என்று நினைக்கிறேன்.

என் எழுத்து நடையும் அவ்வளவு பக்குவப்பட்டதல்ல  பதிவு, முகநூல் மற்றும் எழுத்து என அனைத்திலும் ஆரம்பநிலையிலேயே உள்ளேன்.

இந்த பிளாக் துவங்கிய நோக்கமும் அவ்வளவு முக்கியமாக குறிப்பிடத்தக்கதல்ல.ஏதோ சில பதிவர்களின் பதிவுகளை படித்ததன் தாக்கமும்  இலக்கிய வாதிகள் (என நான் நினைப்போர்) மீது உள்ள ஈடுபாடும்
அவர்கள் அனைவருமே ஆளுக்கொரு பிளாக் வைத்திருப்பதும் அந்த இலக்கிய வாதிகளின் வட்டத்திற்குள் சென்று விட வேண்டும், நமக்கும் ஒரு அடையாளம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற (நப்) ஆசையே காரணம்.
என்ன பெயர் வைப்பதென்று பெருங்குழப்பம் நான் அனைத்திலும் அரைகுறையே கூடவே கொஞ்சம் சோம்பேறியும் கூட.. எனவே எதை குறிப்பாக வைத்தாலும் அதன் வழியாகவே தொடர்ச்சி கொடுக்க வேண்டி வரும்,அது தற்போதைக்கு சாத்தியப்படாது என்ற காரணத்தினால் எனது பெயரையே  வைத்துவிட்டால் அனைத்து வகையிலும் நாம் நினைத்த வகையிலும் செல்ல எளிதாக இருக்குமே என்று என் பெயரை வைத்துவிட்டேன். தினமும் பதிவிடுவதோ சரியான கால இடைவெளியில் பதிவிடுவதோ என்னால் முடியாது என நினைக்கிறேன் ஏனெனில் எனக்கு எழுத காரணமும் ஏதாவதொரு தாக்கமும் தேவையாய் இருக்கிறது முன்பு அதனை டையரியில் காட்டுவேன் இனி இங்கே காட்டலாம் என நினைக்கிறேன்.



இரா.திலீபன்